Tuesday, May 2, 2023

கடிதம் 2: இசாந்தீப் சிங்...

 இக்கடிதம் அக்டோபர் 5, 2015 அன்று எழுதியது.


         நண்பா எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை உண்ணுடன் இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நான் பஞ்சாப்பில் படித்து கொண்டிருந்த போது இது நடந்தது. என்னுடைய வகுப்பு தோழன் பஞ்சாப் மாநிலம் சங்ரூரை பூர்வீகமாக கொண்டவன். பெயர் இசாந்தீப் சிங். பண்ணை இயந்திரவியல் துறையில் படித்து வந்தான். அவன் இளநிலை முடித்து இரண்டு வருடங்கள் தழிழ் நாட்டில் வேலை செய்த அனுபவம் பெற்றிருந்ததனால் என்னைப் பார்க்கும் போதெல்லாம் என்ன அண்ணா நல்லரிக்கிங்களா என தமிழில் கேட்பான். எனக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டிருந்ததோ அதாவது மொழி தெரியாமல் நான் படும் கஷ்டங்களை பார்த்து உணர்வுப்பூர்வமாக அவனும் இதே கஷ்டங்களை தமிழ் நாட்டில் இருந்தபோது சந்தித்திருந்ததினால் நான் அங்கு சென்றதிலிருந்தே என்னுடன் அன்பாக பழகி வந்தான்.

       என்னை பார்க்கும் போதெல்லாம் வாழ்க்கையை பற்றி அழுத்து கொள்வான் பெரும்பாலும் எதிர்காலத்தை பற்றியதாகவே இருக்கும். எப்பொழுது நிறந்தமான அரசாங்க வேலை கிடைக்குமோஎப்பொழுது கல்யாணம் ஆக போகிறதோஎன்கிற புலம்பல்கள் சில நேரங்களில் அதிகமாக கூட இருக்கும். ஆனால் மிகவும் அன்பானவன் அவனைச் சுற்றி எப்பொழுதும் நண்பர்கள் கூட்டம் அதிகம் இருந்து கொண்டே இருக்கும்  நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரி வாழ்க்கை மீண்டும் அமைந்ததனால் ஏற்பட்ட மகிழ்ச்சி எப்பொழுதும் கலகலப்பாக அவனிடம் இருக்கும்.

        நான் இரண்டாமாண்டு இறுதி செமஸ்டர் படிக்கும் பொழுது நடந்த சம்பவம் எனக்குள் ஆழ்ந்த சிந்தனையை ஏற்படுத்தியது. ஒரு வெள்ளிக்கிழமை இரவு சாப்பிடும் போது எப்பொழுதும் போல வாழ்க்கை பற்றிய புலம்பல்கள்,  பிராஜக்ட் வேலைகள் இன்னும் ஆரம்பிக்கவில்லை என பேசிவிட்டு மறுநாள் விடுமுறை என்பதால் ஞாயிற்று கிழமை நடக்கவிருந்த நண்பனின் திருமணத்திற்கு சென்றுவிட்டான். ஞாயிறு அன்று நடந்த கல்யான விருந்தில் மது அருந்திவிட்டு அவனுடைய நெருங்கிய நன்பனுடன் கார் ஓட்டிச் சென்றபோதுசாலையில் விபத்து ஏற்பட்டு அகால மரணம் அடைந்து விட்டான். செய்தி எங்களுக்கு கிடைத்தது. நான் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக அவனுடைய வீட்டிற்கு சென்றிருந்தேன். ரத்தமும் சதையுமாக முகம் சிதைவடைந்த அவனுடைய உடம்பை பார்த்த போது எனக்குள் ஒர் எண்ணம் தோன்றியது. நேற்றுவரை இந்த உடம்பு எவ்வளவு மனச்சிக்கல்களுடன் இருந்ததுஇன்று எல்லாமே முடிந்துவிட்டது.  
    
        மனிதனுடைய வாழ்க்கை என்பது இவ்வளவு தானா. ஒரு அரைமணி நேரத்தில் எல்லாச் சடங்குகளும் செய்து முடித்து விட்டு பிரேதத்தை எரித்தனர். ஆனால் அன்று நான் நினைத்தேன் இன்னும் ஆறு மாதத்திற்குள் இவன் பெயரை எல்லோரும் மறந்து விடுவர். எவ்வளவோ வாய்புகள் நமக்கு இந்த பூமியில் கொடுக்கப்பட்டிருக்கிறது அதை பயன்படுத்தி ஏதாவது ஒரு வகையில் தன்னுடைய சுவடை கூட பதிக்காமல் இந்த மனிதன் இறந்து விட்டானே நமக்கும் ஒரு நாள் இப்படி முடிவு வந்து விட்டாள் என்ன செய்வது. ஆகையால் நமது வாழ்க்கை மற்றவர்களுக்கு ஏதாவது நன்மையை செய்யும் விதமாக இருக்க வேண்டும். நாம் இறந்துவிட்டாள் கூட நாம் செய்து விட்டு போகும் செயல்களினால் எப்பொழுதும் நம்மை நினைவு கூர்ந்து பார்க்கப்பட வேண்டும் என மனதிற்குள்ளே நீண்ட விவாதங்கள் இரண்டு நாள் நடந்தன. ஒரு வாரம் என்னால் சரியாக தூங்க முடியவில்லை. அதற்கு பிறகு தான் எனது நடவடிக்கைகளில் மாற்றம் வரத் தொடங்கின.

         நண்பா இதை ஏன் உனக்கு சொல்கிறேன் தெரியுமா தினமும் செய்தித்தாள்களில் மனிதர்கள் இறக்கும் செய்திகள் வந்துகொண்டுதானிருக்கின்றன. அதை படிக்கும் போதெல்லாம் எந்தவொரு சலனமும் ஏற்படாத மனது ஒரு சம்பவத்தை நேரடியாக பார்க்கும் போது மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது. எனக்குள் ஒழிந்து கிடந்த ஆற்றல்களையெல்லாம் வெளிகொணர்ந்த பெருமை என் நண்பன் இசாந்தீப்பையே சாரும் என எப்பொழுதும் கருதுகிறேன்.  



அன்புடன்
தா.அருள்.

No comments:

Post a Comment