தன்னையறிதல் என்பது என்ன? பற்றி ஞாநி அவர்களின் பார்வை
நான் யார் என்று உணர்
நம் அடையாளம் என்ன
நம் நடத்தை என்ன
நம் இயல்புகள் என்ன
நம் பலங்கள் எவை
நம் பலவீனங்கள் எவை
விருப்பங்கள் எவை
வெருப்புகள் எவை
என்று நம்மை பற்றி எல்லாவற்றையும் நாம் அறிந்திருப்பதே
தன்னையறிதல் ஆகும். இவை எல்லாம் தெரிந்திருந்த்தால் தான் எப்போது நமக்கு வாழ்க்கை அழுத்தமாக
இருக்கிறது பாரமாக இருக்கிறது என்பதை, ஏன் அப்படி இருக்கிறது என்பதையெல்லாம் உணர முடியும்.
நம்மிடம் சில கோலாருகள் இருக்கலாம் ஆனாலும் எனக்கு என்னை பிடிக்கும் ஏனென்றால் என்னிடம்
பல நல்ல குணங்களும் இருக்கின்றன. முழுமையாக நம்மை நாமே அறிவதற்கு இரண்டு அம்சங்களை
கவனிக்க வேண்டும் முதலாவது நம்மை பற்றின நம் பலம் மற்றும் பலவீனம் திறமை சிக்கல்கள்
பற்றி எல்லாம் நாமே என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்பது. இரண்டாவது அம்சம் மற்றவர்கள்
நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று நாம் நினைத்து வைத்திருப்பது இரண்டும் சேர்ந்துதான்
நாம்.
நினைப்பு: நான் ஒருவிசயத்தில் எப்படிப்பட்டவன் என்று நாம் நினைப்பது
நிஜம்:
அசலாக இந்த விசயத்தில் நான் எப்படி இருக்கிறேன் என்பது
லட்சியம்:
அந்த விசயத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று
விரும்புகிறோம்
என்பது
அன்புடன்
தா.அருள்
No comments:
Post a Comment