Thursday, January 28, 2021

மனித வாழ்க்கையைப் பற்றி….

       மனித வாழ்க்கையைப் பற்றி கொஞ்சம் சொல்ல தோன்றுகிறது. சமீப காலமாக நான் அதிகம் தேடித் தேடி படிக்கும் விசயமாக இது இருப்பதினாலும், இன்றைய காலகட்டத்தில் நான் சிந்திக்கும் விசயம் இதுவாக இருப்பதினாலும் நான் என்ன தெரிந்து கொண்டேன் என்ன நிலைப் பாட்டிற்கு வந்துள்ளேன் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.

     இந்த பூமியில் வாழும் உயிரினங்களில் மனிதனுக்கு மட்டும் தான் சிந்திக்கும் ஆற்றல் இருக்கின்றது. மனித இனம் இந்த பூமியில் தோன்றி இரண்டு லட்சம் ஆண்டுகளாகின்றன என்று கூறுகின்றனர். சராசரியாக 75 ஆண்டுகள் வாழக்கூடிய மனிதர்கள் எண்ணங்களால் கட்டமைக்கப்பட்டுருக்கின்றனர். சமூதாய கூட்டமாக வாழும் மனிதர்களிடையே நிறைய ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. மனிதன் நிம்மதியாக வாழ உணவு, உடை மற்றும் உறைவிடம் அவசியமாக தேவைப்படுகின்றது. மனிதர்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகள் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் தடையாக இருக்கின்றது. இந்த ஏற்றத்தாழ்வுகள் பல வகைப்பட்டவையாக இருக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் ஜாதி, மதம், பணம் போன்றவைகள் இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக நான் கருதுகிறேன். ஆகவே இங்கு ஊழல், லஞ்சம் போன்றவைகளினால் மக்களின் உழைப்பு பெருமளவு சுரண்டப்படுகிறது. இதனால் ஏழைகள் மிகவும் ஏழைகளாகவும் பணக்கார்கள் மேலும் பணக்கார்ர்களாகவும் ஆகிக் கொண்டிருக்கின்றனர்.

2 comments: