Saturday, October 25, 2014

எண்ணங்கள் மாற வேண்டும்


(எனது முதல் சிறுகதை முயற்சி)


ரகு வகுப்பில் ஒரு சுமாரான மாணவன். மற்ற மாணவர்களைப் போல் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆசை ரகுவிற்கு இருந்தாலும், தன்னால் முடியாது என்ற எண்ணம் அதிகம் இருந்தது. பரீட்சையில் தான் படித்தவற்றை நினைவு படுத்தி எழுதுவதில் சிரமம் இருந்ததால் அதிக மதிப்பெண்கள் வாங்க முடிவதில்லை, அதனால் சக மாணவர்கள் கேலி செய்வதை என்னி வருத்தப்பட்டான். ரகுவின் வகுப்பில் நாற்பதிற்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் படியான  நண்பர்கள் இல்லை.  

இந்த வருடம் ரகு பணிரெண்டாம் வகுப்பு படிப்பதனால் ஆண்டு இறுதித் தேர்வை மனதில் கொண்டு பள்ளி ஆரம்பித்த நாட்கள் முதலே ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை விட டெஸ்ட் வைப்பதிலேயே அதிகம் ஆர்வம் காட்டி வந்தனர் இதனால் படிப்பின் மீதே ஆர்வம் இன்றி வாழ்க்கை இருள் சூழ்ந்துவிட்டாதாக எண்ணினான். படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு ஏதாவது வேலைக்கு சென்று விடலாம் என்று தோன்றினாலும், அவனது அம்மா இதற்கு கண்டிப்பாக சம்மதிக்க மாட்டார்கள் என அவனுக்கு திட்டமாக தெரிந்ததினால் வேண்டா வெறுப்பக பள்ளிக்கு வருவதும் செல்வதுமாக இருந்து வந்தான்.

ரகுவிற்கு அப்பா கிடையாது பத்து வயது இருக்கும் போது ஒரு விபத்தில் காலமகிவிட்டார் அது முதல் அவனது அம்மா தான் எல்லாம். ஒருகாலத்தில் நிலபுலங்களோடு செல்லவச் செழிப்பில் வாழ்ந்த குடும்பம் என்றாலும், அப்பாவின் ஊதாரித்தனத்தினால் அனைத்தும் இன்று அழிந்துவிட்டன. இதுமட்டுமில்லாமல் கடன் தொல்லை வேறு. ரகுவின் அப்பா இறக்கும் போது ரகு அவ்வளவாக விவரம் அரியாத பிள்ளையாகத்தான் இருந்தான். அதற்கு பிறகு அவனது அம்மா தான் எல்லாம். அவர் ஒரு உணவுவிடுதியில் கூலி வேலை செய்து ரகுவை படிக்க வைத்து கொண்டு இருந்தார்.

தனது வாழ்க்கைதான் இப்படி ஆகிவிட்டது, பணமில்லாமல் வாழ்க்கை நடத்துவதில் எத்தனை சிரமம். மூன்று வேலை உணவு கூட சரியாக கிடைப்பதில்லை. உடுத்துவதற்கு நல்ல துணிமனிகள் இல்லை. உறவினர்களும், மற்றவர்களும் பணமில்லாதால் மதிப்பதில்லை. இந்நிலை மகனுக்கும் நேர்ந்திடக்கூடாதென என்னி எவ்வளவு சிறமப்பட்டாவது ரகுவை படிக்க வைத்துவிட வேண்டுமென அவனது அம்மா தனது கஷ்டங்களை வெளியில் காட்டிக்கொள்ளாமல் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தார். மற்றவர்களைப் போல் நான் என்ன படிக்கிறேன் பரிட்சைகளில் ஏன் அதிக மார்க்குககள் வாங்குவதில்லை என்று அம்மா கேட்பதில்லை என்று சில நேரங்களில் ரகு வருத்தப்பட்டாலும், படிப்பறிவில்லாத  அம்மா தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பொய்யாக்கக்கூடாது என அதிகம் கவலைப்பட்டான்.

ரகுவின் அன்றாட வேலைகளில் பள்ளிக்கு வருவது மட்டும் தான் நரக வேதனையாக இருந்தது மற்ற நேரங்களில் அவன் சந்தோசமாகவே இருந்தான் மேலும் இந்த வருடம் பணிரெண்டாம் வகுப்பு ஆண்டுத்தேர்வு அரசாங்க தேர்வு என்பதால் அனைவருக்கும் எதிர்பார்புகள் இயல்பாகவே இருந்தன. குறிப்பாக அவனது அம்மாவிற்கு அதிகமாகவே இருந்தது. இது ரகுவிற்கு மனச்சுமையை ஏற்படுத்தியது. ஒரு நேரத்தில் யோசித்து பார்க்கும் பேது பதினொன்றாம் வகுப்பு வரை எப்படி பெயிலாகமல் வந்தோம் என்பதே வியப்பாக அவனுக்கு இருந்தது. காலையில் ஏழுமணிக்கு எழுவான் அம்மாவிற்கு கூடமாட எதாவது உதவிகள் செய்துவிட்டு புத்தகங்களுடன் சிறிது நேரம் போராடுவான் அன்றைய தினம் நடக்கவிருக்கும் வகுப்பு டெஸ்டுகளுக்கு மனப்பாடம் செய்வான் ஒன்பது மணிக்கு சைக்கிளில் பள்ளிக்கு கிளம்பினால் மாலை வரை ஏதோ கற்பனை உலகத்தில் உலாவிவிட்டு மாலையில் வீடு வந்து சேர்வான். மாலையில் கொஞ்ச நேரம் விளையாட்டு, கொஞ்ச நேரம் பக்கத்து வீட்டில் டீவி பார்ப்பது அப்புறம் புத்ததகத்தை திறந்து வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு உலகத்தில் சஞ்சரிப்பது, பொதுவாக தன்னுடன் படிக்கும் மாணவர்களை ஒப்பிட்டு பார்பதிலேயே அதிக நேரம் கழிந்துவிடும் அதற்கு பிறகு இரவு சாப்பாடு, உறக்கம் என்று ரகுவின் அன்றாட பொழுதுகள் இப்படியாக கழிந்தன.

ஒருநாள் பள்ளியில் அந்த அதிசயம் நடந்தது. ஏற்கனவே இருந்த இயற்பியல் ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றலாகி போனதால் அவருக்கு பதிலாக கிருஷ்னன் சார் புதிதாக இயற்பியல் பாடம் எடுப்பதற்கு அமர்த்தப்பட்டிருந்தார். அன்று தான் முதன் முதலாக ரகுவின் வகுப்பிற்கு பாடம் எடுக்க வந்தார், முதல் நாள் என்பதால் அறிமுக வகுப்பாக அது இருந்தது. எல்லோரிடமும் நீ வருங்காலத்தில் என்னவாக போகிறாய்? உன்னுடைய பொழுதுபோக்கு என்ன? பாடபுத்தகங்களை தவிர வேறு புத்தகங்கள் மற்றும் கதைகள் படிக்கும் பழக்கம் உண்டா? அப்படி ஏதும் இருந்தால் எந்தமாதிரியான புத்தகங்கள் ரொம்ப பிடிக்கும்? அந்த புத்தகம் பிடிப்பதற்கான காரணம் என்ன? என்பதுமாதிரியான வினாக்கள் அதிகம் கேட்டார். மாணவர்கள் ஒவ்வொருவரும் சொல்லும் பதிலை உண்ணிப்பாக கவனித்தார் பேச கூச்சப்படுவர்களை ஊக்கப்படுத்தி தைரியமாக பதில் பேச வைக்க முயற்ச்சி செய்தார். ரகுவின் முறை வரும் போது அவனால் ஏதும் பேச முடியவில்லை அவனது பெயரை மட்டும் அறிமுகப்படுத்தி கொண்டு மற்ற கேல்விகளுக்கு பதிலலிக்காமால் தலையை குனிந்தவாறு சோகத்தில் நின்று கொண்டிருந்தான். கிருஷ்னன் சார் சில கேள்விகளை கேட்டுவிட்டு ரகுவை உட்கார செய்து விட்டார். அன்றைய பொழுது ரகுவிற்கு வித்தியாசமாக இருந்தது. இயற்பியல் பாட வேலை போனதே தெரியவில்லை மேலும் உள்ளுக்குள் ஒருவித பயம் தொற்றிக்கொண்டது முதல் நாள் என்பதால் வகுப்பில் கிருஷ்னன் சார் சந்தோசமாக இருப்பதாக காட்டிக்கொண்டிருக்கலாம், வரும் நாட்களில் மற்ற ஆசிரியர்கள் போல் வகுப்பு டெஸ்டடுகளை ஆரம்பித்து தினமும் பாடங்களை மனப்பாடம் செய்து வர சொல்ல போகிறார் என்ற உணர்வு ரகுவிற்கு ஏற்பட்டது.

கிருஷ்னன் சார் வகுப்பிலுள்ள அனைவரிடமும் கனிவாகவும், அன்பாகவும், சின்ன சின்ன தவறுகளை பெரிதுபடுத்திக்கொள்ளாமலும் இருப்பதோடு தனிப்பட்ட மாணவனின் அறிவை மேம்படுத்துவதிலேயே குறியாக இருந்தார். குறும்புகள் செய்யும் மாணவர்களை கண்டு மகிழ்ச்சி அடைவார், இந்த வயதில் குறும்புகள் செய்யாமலிருப்பது தான் தவறு என்றும், வகுப்பறைகளில் தனது சின்ன வயது அனுபவங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்வதும் உண்டு. ஒரு மாணவன் சரியாக படிக்காமலிருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன குடும்பச்சூழ்நிலை, ஏழ்மை என மிக நீண்ட பட்டியல் அதற்கு கூறமுடியும். பள்ளிக்கு வருகின்ற எல்லோரும் நன்கு படித்து, பெரியநிலைக்கு வரவே ஆசைப்படுவோம் யாரும் மக்கு மாணவர்களாக இருக்கவிரும்புவதில்லை என்றும் கூறி, மாணவர்களிடம் தன்நம்பிக்கையை வளர்பதும் தனது அன்றாட வேலைகளில் ஒன்றாக கருதினார். இப்படியாக கிருஷ்னன் சார் மாணவர்களின் மனதில் தனியானதொரு இடத்தை பொற்றார். மற்ற ஆசிரியர்கள் போல் இவரில்லை என மாணவர்கள் சகஜமாக நெருங்கி பலக ஆரம்பித்தனர்.

நாட்கள் கடந்தன. கிருஷ்னன் சார் வகுப்பென்றால் அதிகம் ஆர்வம் ஏற்பட ஆரம்பித்தது. பாட சம்மந்தமாக நிறைய குட்டிக் கதைகள் சுவாரசியமான சம்பவங்கள் மற்றும் நடைமுறை உதாரணங்கள் சொல்லிபாடம் எடுக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் எல்லா ஆசிரியர் போல் தான் இவரும் இருப்பார் என்று தோன்றிய ரகுவிற்கு கிருஷ்னன் சார் மீது இவர் வேறுமாதிரியானவர் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. இயற்பியல் வகுப்பொன்றால் சந்தோசமும்,  இன்றைக்கு என்ன கதை சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்பும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட தொடங்கின. குறிப்பாக ஒரு விசயத்தை ரகு கவனிக்க ஆரம்பித்தான் கிருஷ்னன் சார் அதிகம் டெஸ்டுகள் வைப்பதில்லை என்றும், மாறாக மாணவர்களுடன் கலந்துரையாடுவதிலும், மாணவர்களை முந்தைய நாள் எடுத்த தலைப்பை பற்றி தாங்கள் புரிந்து தெரிந்து கொண்டவற்றை பகிர்ந்துகொள்ள சொல்வதிலுமே ஆர்வம் காட்டினார், தான் நடத்தும் பாடங்ககளை எந்த அளவிற்கு புரிந்து வைத்துள்ளார்கள் என்று தெரிந்துகொள்ளவதிலேயே அதிக கவனம் செலுத்துவது ரகுவிற்கு அதிசயமாக இருந்தது.

ஒருநாள் வகுப்பில் அணு உலைகள் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருக்கையில் அணுவை பற்றின புரிதல் மனிதனுக்கு எப்போது ஏற்பட்டது, ஆரம்ப நாட்களில் விஞ்ஞானிகள் எவ்வாறு இவ்விசயத்தை அனுகினர், பூமியில் உள்ள பொருட்கள் எல்லாம் அணுக்களால் ஆக்கப்பட்டது என்று உலகத்திலிலுள்ள எல்லோராலும் ஏற்றுக்கொண்ட பிறகு அறிவியலின் வளர்ச்சி எதை நோக்கிச் சென்றது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்கிற விஞ்ஞானிதான் முதன் முதலில் அணுவை பிளந்தால் அளப்பறிய ஆற்றல் கிடைக்கும் என்ற கருத்தை சொன்னதாகவும் விளக்கினார். அதேடுமட்டுமில்லாமல், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை அவரது ஆசிரியர்கள் படிக்க லாயக்கற்றவன் என்று கூறியதையும், பின்னாட்களில் ஆல்பர்ட் உலகம் போற்றும் மாமேதை ஆனதையும் சொல்லிவிட்டு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு திறமை ஒளிந்திருப்பதாகவும், எல்லோரும் சரியான பயிற்சியும், விடா முயற்சியும் மேற்கொண்டால் வாழ்க்கையில் பெரிய வெற்றிகளை பொறலாம் என்று பொருமையாகவும் அன்போடும் கிருஷ்னன் சார் அன்று நடத்திய பாடம் ரகுவுடைய சிந்தனையை வெகுவாக பாதித்தது.   

 அதற்குபிறகான நாட்கள் ரகுவின் நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தின. ஒருநாள் கிருஷ்னன் சார் தனிமையில் இருக்கும் போது தாமக வழிய சென்று தனது பிரச்சினைய கூறி வருந்தினான். அதற்கு கிருஷ்னன் சார் மனப்பாடம் செய்து பரிட்சை எழுதுவது உனக்கு உள்ள பிரச்சினன மட்டுமள்ள எல்லோருக்கும் இருக்ககூடியதுதான் என்று கூறி படிப்பின் மீது ஆர்வம் வரக்கூடிடய செயல்களில் ஈடுபட்டார். பாடங்களை புரிந்து கொண்டு படிக்கவேண்டிய வழிமுறைகளை கற்றுக்கொடுத்தார்.

 ஆண்டு இறுதித் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கையில் இயற்பியல் பாடத்தில் தாம் முழுமதிப்பெண்கள் கண்டிப்பாக எடுத்துவிடுவோம் என்ற நம்பிக்கை ரகுவிற்கு அதிகம் ஏற்பட்டு இருந்தது. மேலும் மற்ற பாடங்களில் பரிட்சை எப்படி எழுத போகிறோம் என்ற கவலையும் இல்லாமலில்லை. கிருஷ்னன் சார் போன்று எல்லா ஆசிரியர்களும் கிடைத்து விட்டால் என்னை போலுள்ள முட்டாள் மாணவர்களும் படிப்பின் மீது ஆர்வம் காட்டமுடியும் என்ற சிந்தனை ரகுவிற்கு தோன்ற ஆரம்பித்தது. 






 தா. அருள் செல்வம்
(18.10.2014; 10.30 am)

No comments:

Post a Comment