நான் மிகவும் மதிக்கக்கூடிய எழுத்தாளர்கலுள் ஒருவரான ஞாநி அவர்கள் இறந்துவிட்டார் என்ற செய்தி என்னை மிகவும் வாட்டுகிறது. எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இவரைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறேன். எந்த ஒரு சமூக பிரச்சினையையும் வேறு வித கோணங்களில் அனுகக்கூடியவர். தனக்கு சரி என பட்ட கருத்துக்களை எந்த வித சமரசமும் செய்து கொள்ளாமல் வெளிப்படையாக முன்வைக்கக்கூடியவர். பாரதி மீது தீராத காதலும் தந்தை பொரியாரின் மீது மிகுந்த மரியாதையையும் வைத்திருந்தவர். ஞாநி அவர்களின் இறப்பு தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
No comments:
Post a Comment