Sunday, May 31, 2015

பிரச்சினை யாரிடத்தில்



கடந்த மே மாதம் 8-ம் தேதி (8.5.2015) தமிழ் இந்து நாளிதழில் ”காந்தியை ஏமாற்றிவரும் இந்தியா” என்றொரு கட்டுரை வெளியாகியிருந்தது இதை எழுதியவர் ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர் மு.இராமனாதன். கட்டுரையின் சாராம்சம் இதுதான்

“ஹாங்காங்கில் சட்டவிதிமுறைகளை பினபற்றுவது பற்றி பள்ளிகளிலேயே போதிக்கின்றனர் அதனால் அங்கு மக்கள் பண்போடு நடந்துகொள்கின்றனர். புறத்தில் தூய்மையும் அகத்தில் நேர்மையாகவும் இருக்கவேண்டுமென்று போதித்த காந்திய தேசத்தில் சட்டவிதிமுறை மீறல்கள் சாதரணமாக நடக்கின்றன இதற்கு கல்வி வணிகமையமாகிவிட்டதுதான் காரணம்” என்பது.

அண்மையில் எனது அம்மாவிடம் பேசும் போது இதைச் சொன்னேன் தனியார் பள்ளிக்கூடங்களை தேடித் தேடி சேர்க்கத் துடிக்கும் நம்மவர்களுக்கு உண்மையில் மாணவனின் அறிவு வளர்ந்திருக்கா இல்லையா என என்னைக்காவது கவலைப்பட்டதுண்டா? நம்முடைய எண்ணமெல்லாம் மார்க் அதிகம் வாங்கிவிட்டானா இல்லையா என்பதில் தான் இருக்கிறதென்று என்று கேட்டேன். அதற்கு அம்மா கவர்மெண்டுல அதிக மார்க்கதான கேக்குறான் என்று சொன்னார். அம்மா படிப்பறிவில்லாதவர் இருந்தாலும் படிக்க வைத்தால் தான் பிள்ளைகளின் எதிகாலம் நன்கு அமையும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் இவ்வாறு சொல்வதின் நிதர்சணம் எனக்கு புரிகிறது ஆனால் என்வாதம் இதுவல்ல.

படிப்பு என்பது என்ன?

பெரும்பாலானோர் கருதுவது என்னவென்றால் பாடபுத்தகத்தில் இருப்பதை படித்து, பரிட்சை எழுதி, மார்க் அதிகம் வாங்கினால் போதும் அதைத் தவிர, அதற்கு மேலே படிப்பு என்பது ஒன்றுமில்லை என்று வரையறுத்திருக்கிறார்கள். நன்கு படித்தவர்கள் எத்தனை பேர் ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், எத்தனை பேர் வாழ்க்கையில் பெரிய அளவில் சாதித்திருக்கிறார்கள் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலை படிப்பிலோ, கல்வி முறையிலோ அல்லது பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ ஆசிரியரிடமோ தேடக்கூடாதென்றும் மறைமுகமாக இவர்கள் கூறுவது எனக்கு புரிகிறது. இன்னும் சொல்லப்போனால் பல பெற்றோருக்கே இன்னும் சரியாக இது விளங்கவில்லை என்றுதான் சொல்வேன். பணம் சம்பாதிக்க படிப்பு அவசியம் அதற்கு என்ன வழி அவ்வளவு தான் அவர்கள் பார்வை நான் மெத்த படித்த பெற்றோர்களை மனத்தில் கொண்டு சொல்லவில்லை என்னுடைய அம்மா போன்ற பெற்றோர்களை மனத்தில் கொண்டுதான் இதைச் சொல்கிறேன்.

இதனால் அறிவியியல் என்ன சொல்கிறது, வரலாறு என்ன சொல்கிறது, இலக்கியங்கள் என்ன சொல்கின்றன இதல்லாம் யாருக்கு வேணும். முழுவதுமாக உணர்ந்து படித்தல் வேண்டும் எனும் கோட்பாடே இன்று வழக்கொலிந்து வரும் காலகட்டத்தில், மேற்கண்ட கட்டுரையில் பண்பை பற்றி பேசுகிறார் கட்டுரையாளர் அவர் தமிழகத்தில் இருப்பவராக எனக்கு தெரியவில்லை ஏனெனில் தமிழர்களுக்கு சினிமாவும், கிரிகெட்டும் மற்ற கேலிக்கைவிசயங்களும் போதிக்க செலவலிக்கும் பணமும், பாடும் உண்மையில் தொலைக்காட்சி, எஃப் எம் ரேடியோ, பத்திரிக்கை மற்றும் வார மாத இதழ்கள் நடத்துபவர்களுக்குத்தான் தெரியும். எவ்வளவு முதலீடு செய்து எத்தனை ஆண்டுகள் முயற்சியின் பயனால் இவ்விசயம் நமது மூலையில் பதியப்பட்டுள்ளது இதையெல்லாம் தாண்டி பண்பு நலன்களை இளையதலையினருக்கு வளர்த்துவிடுவார்களா நமது ஆட்சியாளர்களும் கல்வியாளார்களும். தமிழ்நாட்டில் பெறக்க போகும் குழந்தை முதற்கொண்டு இப்பண்புகள் மூலைச் சலவை செய்து பிறந்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை அவருக்கு. அடுத்தவன் வாழ்ந்தா என்ன? செத்தால் நமக்கென்ன? எனக்கு என் வேலை நடந்தால் போதும் என்ற மனப்பாங்கே வளர்க்கப்பட்டுள்ளது இங்கு என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன். ஒழுக்கமாக வாழ்ந்தால் காசு கிடைக்குமா? கோடி கோடியாக காசு கிடைக்குமென்றால் ஒருவேலை சமூதாயத்தில் பாதிபேர் இந்த ஒழுக்கம் என்ற சொல்லையாவது உச்சரித்துக் கொண்டிருப்பார்கள் வாழ்வது என்பது பற்றி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் காசு கிடைக்குதுல்ல.

நல்லவிசயத்திற்கு ஒரு விதிமுறை ஏதாவது கொண்டுவந்தால் கூட அதில் ஓட்டைகளை கண்டுபிடித்து எப்படி ஏமாற்றலாம் என்றுதான் என்னிக் கொண்டிருக்கிறார்கள், லஞ்சம் கொடுத்து எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொள்ளமுடியும் என்பதுதான் அனைவரின் நோக்கமும் செயல்பாடும் கேட்டால் சர்வைவல் ஆப் த ஃபிட்டஸ்ட் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லாதார் என்று திருவள்ளுவரே சொல்கிறார் விதி முறையாவது ஒழுக்கமாவது எல்லாம் மண்ணாங்கட்டி. அடுத்தவனை ஏமாற்றி வாழக்கற்றுக் கொடுக்கவேண்டும் நம் கல்விமுறை என்னைப் பொறுத்தவரையில் இப்பண்புதான் இன்றைய காலகட்டத்தில் நமக்குத் தேவை.
  
அக்கட்டுரையில் ஒரே ஒரு உதாரணத்தை சுட்டிகாட்டியிருந்தார். அதிகாலையில் ஒரு குடுப்பத்தினர் சென்னை இரயில் நிலையத்திற்கருகில் ரோட்டை கடக்க மூட்டை முடிச்சுகளோடு டிவைடரை எகிறி குதித்து கடந்து வந்தார்கள், இதனால் ஏற்படும் விபரீதத்தை உணர்ந்தவர்க்ளாக தெரியவில்லை. சாலைவிதிகளை சர்வசாதரணமாக மீறுகிறார்கள், காந்தி பொறந்த நாட்டில் இப்படி எல்லாம் செய்கிறார்களே இது காந்தியை ஏமாற்றும் வேலையல்லவா? நேர்மையும் நீதியும் போதித்த காந்தியை ஏமாற்றுகிறார்கள் என்று எழுதியிருந்தார். எனக்கு இதைப்படித்தவுடன் சிரிப்புத்தான் வந்தது தமிழ்நாட்டில் மற்றும் இந்தியாவில் என்னமோ எல்லா விசயங்களும் சட்டப்படி, விதிமுறைகள் படி அச்சு அசலாக பிசிறு தட்டாமல் மதித்து வாழ்ந்து வரும் மக்கள் இப்படி செய்கிறார்களே என்று ஆதங்கப்பட்டு கொள்ள. காந்தி வாழ்ந்த காலத்தலேயே நம்மாளுங்க இப்படிதான் இருந்தார்கள் இதற்கு சரித்திர சான்றுகள் ஏராலம் இருக்கின்றன சுதந்திரம் கிடைச்சு இவ்வளவு நாளயிடுச்சே என்னத்த செஞ்சுட்டோம் என்று ஒருவரை ஒருவர் குறைகூறிக்கொண்டு அப்படியே தான் வாழ்ந்துகொண்டு வருகிறோம். என்னத்த பெரிய மாற்றத்த எதிர்பார்க்க முடியும்.

தனிமனித ஒழுக்கம் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும், உணர்வுப்பூர்வமாக, ஆழ்மனதில் பதியும்படி முதலில் போதிக்க வேண்டும். பணம் சம்பாதிப்பதற்காக எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலை பெற்றோர்களிடமிருந்து அகலவேண்டும். இப்படி அடிப்படையிலேயே ஆயிரம் குளருபடிகள் உள்ள நம் கல்விமுறையை வைத்துக் கொண்டு, சமூதாயத்தில் நடக்கும் விசயங்களைக் கண்டு வேதனைப்படுவதும் பிரச்சினை யாரிடத்தில் இருக்கிறதென்று அலசி ஆராய முற்படுவதுவும் என்னைப் பொறுத்தவரையில் முட்டாள்தனமான செய்ல்களே. மாற்றத்தை உண்மையில் எதிர்பார்க்கும் எவரும் கல்விமுறைகளை திருத்தியமைத்து செயல்முறைப்படுத்திட என்ன வழி என்பதை சிந்திப்பதே சாலச்சிறந்தது அதைவிட்டுவிட்டு இம்மாதிரியான் கட்டுரைகள் ஆயிரம் வெளியானாலும் அதனால் சமூதாய தாக்கம் ஒன்றும் இருக்காது.

Sunday, May 10, 2015

ஆற்றல் (Energy)



அறிமுகம்:
ஆற்றல் பலவகைப்படும் அவை வெப்ப ஆற்றல், மின் ஆற்றல், வேதி ஆற்றல், நிலையாற்றல் மற்றும் இயக்க ஆற்றல் என பிரிக்கப்பட்டுள்ளன என்று பள்ளி பாடங்களில் நாம் படித்ததுண்டு. ஆனால் நான் இங்கு ஆற்றல் என பொதுவாக குறிப்பிடுவது பொட்ரோல், டீசல், நிலக்கரி, சூரியன் மற்றும் காற்றிலிருந்து பெறப்படும் ஆற்றல்களாகும் இவையும் மேற்குறிப்பிட்ட வகைகளுக்குள் எதோ ஒருவகையில் சம்பந்தம் உடையது என்பது கூர்ந்து கவனித்தால் புரியும்.

பெருகி வரும் மக்கள்தொகையினால் பூமியிலுள்ள ஆற்றல் வளங்கள் வெகுவாக குறைந்து வருகின்றன குறிப்பாக நிலத்திற்கடியில் கிடைக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரி போன்றவைகளை சொல்லலாம்.  மேலும் இவைகளை எரிப்பதினால் சுற்றுசூழல் மாசடைகிறது. அதுமட்டுமில்லாமல் உலக வெப்பமயமாதல் பிரச்சினை இன்று மனிதகுளத்திற்கு பெரிதும் சவாலாக அமைந்துள்ள ஒரு பிரச்சினை. இவைகள் எப்படி உருவானது?, கட்டுபடுத்தும் காரணிகள் என்னென்ன? அழிந்து வரும் ஆற்றல் வளங்களுக்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கக்கூடிட வளங்களை நமது தேவைகளை பூர்த்தி செய்ய எப்படி பயன்படுத்துவது?  என்னென்ன தொழில் நுட்பங்கள் உள்ளன என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வது அவசியம். அதற்கு முதலில் ஆற்றல் என்றால் என்ன என்பதிலிருந்து தொடங்குவோம்.

ஆற்றல்:

     வேலை செய்யும் திறனே ஆற்றல் எனப்படும். ஆற்றலை கண்ணால் பார்க்க முடியாது ஆனால் உணர முடியும்; காற்றைப் போல. ஆற்றலை அளப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆற்றல் பற்றின வரையறையை கொஞ்சம் புரியும் படி விளங்கிட கீழ்கண்ட உதாரணம் நமக்கு உதவும். ஒருவர் உருவத்தில் மெலிந்தவராக காணப்படுவார் ஆனால் உடலை வருத்தி அதிக வேலை செய்யும் திறன் உள்ளவராக இருப்பார். அதேசமயம் உடல் பருமன் உள்ளவர்கள் உடலை வருத்தி வேலை செய்ய மிகவும் சிரமப்படுவார்கள். ஒருவர் எவ்வளவு வேலை செய்திருக்கிறார் என்பதை பொருத்து அவரிடம் உள்ள ஆற்றலை கணக்கிட முடியும். இதன் மூலம் அதிக வேலை செய்பவர்களிடம் ஆற்றல் அதிகம் உள்ளதென்றும் குறைவான வேலை செய்பவர்களிடம் ஆற்றல் குறைவு என்பதையும் புரிந்துகொள்ள முடியும். மேற்கண்ட வறையரை இயந்திரங்களுக்கும் பொருந்தும்.   

ஆற்றலின் அலகு ஜீல் ஆகும்

ஆற்றலின் வகைகள்:
இரண்டு வகையான ஆற்றல்கள் உள்ளன அவையாவன 

1.  புதுபிக்கக்கூடிய ஆற்றல்

ஒருமுறை பயன்படுத்திவிட்டு மீண்டும் மீண்டும் நம்மால் உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றல்களுக்கு புதுபிக்கக்கூடிய ஆற்றல் எனப்படும்.

உதாரணம்: சூரிய ஆற்றல், காற்றின் மூலம் பெறக்கூடிய ஆற்றல்

2. புதுபிக்க முடியாத ஆற்றல்

ஒருமுறை பயன்ப்டுத்திவிட்டால் மீண்டும் அவைகளிடமிருந்து ஆற்றலை உற்பத்தி செய்ய இயலாது இவ்வகை ஆற்றல்களுக்கு புதுபிக்க முடியாத ஆற்றல் என்று பெயர்.

உதாரணம்: பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரியிலிருந்து பெறப்படும் ஆற்ற்ல்கள்

  மேற்கண்ட ஆற்றல்கள் நிலத்திற்கடியிலிருந்து பெறப்படுவதால் இவைகளின் இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருள்களுக்கு மாற்று தீர்வாக சூரிய மற்றும் காற்று ஆற்றல்களை பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகளும் அரசாங்கங்களும் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

Tuesday, April 14, 2015

ஜெயகாந்தன் என்றொரு சகாப்தம்



நான் மிகுந்த மரியாதை கொண்ட எழுத்தாளர்களுல் ஜெயகாந்தனும் ஒருவர். சென்றவாரம் அவர் இறந்த செய்தியை கேட்டு மிகவும் வருந்தினேன். வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை சந்திக்க நேருகிறது ஆனால் ஒருசிலர் மட்டும் என்றும் மனதில் நின்றுவிடுவார்கள் அப்படிப்பட்டவர்களில் எனக்கு ஜெயகாந்தனும் ஒருவர். நான் அடிக்கடி எனக்குள் கேட்டுக் கொள்வதுண்டு நாம் எதற்காக வாழ்கிறோமென்று. வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்துலயும் ஏதோ ஒன்றை துரத்திக் கொண்டு இருப்பதைப் போன்ற இந்த வாழ்க்கையை நான் வாழ்ந்து என்ன பெரிதாக சாதித்து விடப்போகிறேனென்று. மனிதனுடைய சராசரி ஆயுள் 60-75 வருடம் என்று சொல்கிறார்கள். வெறும் சொற்ப காலமே இந்த பூமியில் வாழப்போகும் நான் எதற்காக இந்த சமூதாய சிக்கல்களில் மாட்டிக் கொண்டு அல்லல் பட வேண்டும். இந்த கேள்விகளுக்கு எனக்கு விடைகள் கிடைத்த இடம் ஜெயகாந்தன்.   

அவர் எழுதுவதை நிறுத்தி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. அதற்கு எனது எழுத்து இக்காலத்தவர்களுக்கு ஒத்துவாராது என்று கூறியதாக நினைவு. நான் யோசித்து பார்க்கின்றேன், இன்று ஒரு சினிமா நடிகருக்கு உடம்பு சரியில்லை என்றால் வருத்தப்படும் தமிழர்கள் பெத்த அம்மா, அப்பாவிற்கு ஏதாவது ஒன்றென்றால்கூட அவ்வளாவாக வேதனைப்படுவதில்லை. இன்று பெரும்பாலனவர்கள் குறிப்பாக என்னைப் போன்ற இளைஞர்கள் சினிமா மற்றும் கிரிகெட் ஆட்டத்தில் அதிக அக்கரை காட்டியும் தங்கள் பொன்னான நேரத்தை அதிகம் செலவலித்தும் வருகின்றோம் நமக்கு தெரியப்போவதில்லை நம்முடைய அறியாமையை பயன்படுத்தி மற்றவர்கள் எப்படி லாபமடைகின்றனர் என்று.  இந்த மோகம் மூலைச்சலவை செய்யப்பட்டு ஜீன்களிலும் பதிந்து விட்டது இப்படிப்பட்டவர்களுக்கு இவர்கள் விரும்பும்படியான கதைகளை ஜெயகாந்ததன் ஒருபோதும் படைத்துவிட முடியாது, தான் எழுதாததற்கு அவர் கூறிய விளக்கத்திற்குள்ளே எவ்வளவு நிதர்சணம் இருந்திருக்கின்றது என்பதை என்னால் இன்று உணர்ந்துகொள்ள முடிகின்றது.

ஜெயகாந்தன் அவர்கள் ஏழைகளின் வாழ்க்கையை தன் கதைகளில் விவரிக்கும் பாங்கு உண்மையில் ஏழையாய் இருப்பவர்களுக்குத்தான் புரியும். அவருடைய ”யாருக்காக அழுதான்” கதையை படிக்கும் போது என்னையறியாமல் நான் அழுதது இன்றும் நினைவிலிருக்கிறது. இன்று நமது பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கும், சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் ஏழைகள் ஒரு காட்ட்சிப் பொருளாக தெரிகின்றனர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. தனது சிறுவயது நாட்களில் அவருக்கு ஏற்ப்பட்ட அனுபவப்பதிவுகள் அவை.

பாரதியாரின் கவிதைகளுக்கு ஏற்ப தனது எழுத்தை ஒரு தவமாக பாவித்தவர் ஒரு இடத்தில் இப்படி சொல்கிறார் “கல்லடி கிடைத்தாலும் எழுதுவேன், காசு தரவிட்டால் தான் என்ன? பிழைப்புக்கு வேறு ஏதேனும் தொழில் செய்வேன். எழுத்து எனக்கு சீவனமல்ல; அது என் ஜீவன்”.   இன்று உணர்வுப்பூர்வமான செயல்களை நாம் இங்கு எதிர்பார்க்கலாகாது. எல்லாமே மெக்கானிக்கலாக மாறிவிட்டது. வாழ்க்கை உட்பட. அண்மையில் நான் படித்த வரிகள் “வாழ்க்கை என்பது ஒரு அறிய வாய்ப்பு ஆனால் அதன் மதிப்பு வாழ்வோரைப் பொறுத்தது” என்று, பிள்ளைகளுக்கு காசு பணம் அதிகம் சேர்த்து வைத்தாரா என்று  தெரியவில்லை ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டார் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது ஏனெனில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து வரும் என்னைப்போன்ற எத்தனையோ பேர் அவரை நினைவுகூறுகின்றனர் இதை விட ஒரு மனிதனுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள்  

வாழ்க்கைப் பற்றி சில வரிகள் (ஜெயகாந்தனின் சிந்தையில் ஆயிரம் கட்டுரைத் தொகுப்பிலிருந்து நான் ரசித்தது)

  • ”வாழ்க்கைக்கு எவ்வளவோ விசயங்கள் தேவைதான், ஆனால் ‘இதுவே வாழ்க்கை, வாழ்வதுவே இதற்குத்தான்’ என்னும்படியாக எனக்கு எதுவும் இல்லை”.

  • ”எனது சுயமரியாதை முக்கியம் என்பதால் மற்றவரின் சுதந்திரத்தில் நான் தலையிடுவதில்லை”.

  • ”நன்றியுடைமை என்பது முகஸ்துதி அல்ல; லஞ்சம் கொடுப்பதும் அல்ல”.

  • ”எந்த புகழுக்கும் ஏங்கித்தவிக்கிற வேட்கை எனக்கில்லை; அந்த வேட்கை இல்லாததால் எனக்கு விரக்தியும் இல்லை”.

  • ”எந்த ஒரு காரியத்தையும் கேவலம் என்று நினைத்துக் கொண்டும், கேவலம் என்று தெரிந்து கொண்டும் அதைச் செய்வது கீழ்மையாகும். நான் மேலானவனானால் நான் செய்யும் காரியங்கள் எதுவாயினும் அவை மேன்மையுறுதல் வேண்டும்”.

  • ”நாம் அழுவதானால் நமக்காகவே அழுவோம் அதைத் தவிர நாம் ஏதும் செய்வதற்கில்லை. நாம் வருத்தப்படுவதனால் நமக்காகவே வருத்தப்படுவோம், இயற்கை அதற்குத்தான் நம்மை லாயக்காக்கியிருக்கிறது”.

  • ”என்னுடைய பார்வைதான் சரியென்று சாதிக்கிற பிடிவாதம் எனக்கில்லை. இந்தப் பார்வை தவிர பிற பார்வைகளெல்லாம் தவறானது என்று சாதிக்கிற அறியாமையும் எனக்கில்லை. இது என்பார்வை”.  
 
  • ”இந்த மண்ணில் பிறந்தோமேயொழிய இந்த மண்ணின் மீது உரிமை பாராட்ட இதனை நாம் படைத்தோமில்லை”.   

    நடைமுறை வாழ்க்கையில் எவ்வளவோ எழுத்தாளர்களை நான் கவணித்து வருகிறேன். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்ற கூற்றுக்கு ஏற்ப பணம் கிடைக்குமென்றால் எதையும் அவர்கள் எழுத தயங்குவதேயில்லை. அதனால் சமூகத்திற்கு என்ன நன்மை, என்ன பாதிப்பு என்பதை ஒருபோதும் அவர்கள் கவலை கொள்வதாகவும் தெரியவில்லை ஆனால் ஜெயகாந்தன் பணத்தை ஒரு பிண்டமாகவே பாவித்தவர் எவ்வளவோ பெரிய கவுரவங்கள் கிடைத்த போதிலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் எளிமையாக வாழ்ந்த வாழ்க்கையை எல்லோரும் அறிவர். காந்தியடிகள், தந்தை பெரியார், கர்மவீரர் காமராஜர் போன்றோரின் வாழ்க்கைகளை நான் படித்துத்தான் தெரிந்து கொண்டேன். ஆனால் சமகாலத்தில் இப்படி ஒரு ஆளுமையை நேரடி பாதிப்பினால் உள்வாங்கிக் கொண்ட அனுபவம் என்வாழ்வில் பசுமையாக இருக்கும். தமிழ்ச் சமூக வரலாற்றில் இவருக்கென்று தனியிடம் என்றும் இருக்குமென்று எல்லோரையும் போல நானும் நம்புகின்றேன்.



 நன்றி: தி இந்து, தமிழ் நாளிதழ்

Wednesday, April 8, 2015

சமூதாய வானொலி: அறிவியல் அறிவோம்



      யாருமே இல்லாத கடைக்கு டீ ஆத்திகிட்டிருப்பதைப் போல நானும் அறிவியல பத்தி பேசிக்கிடிருக்கேன். ஆர்வமுள்ளவர்கள், ஆர்வமில்லாதவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருக்கும் தேவையான செய்திகளுடன் நான் வழங்கிவரும் அறிவியல் அறிவோம் வானெலி நிகழ்ச்சி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சமுதாய வானொலியில் வாரம்தோறும் திங்களன்று ஒலிபரப்பப்பட்டுவருகின்றது.

இதுவரை வந்த நிகழ்ச்சிகள்

வ.எண்
தலைப்பு
தேதி
1.
மாங்கல்யான் வெற்றிக்கதை
13.10.2014
2.
நோபெல் பரிசு இயற்பியல் 2014
20.10.2014
3.
நோபெல் பரிசு தேர்வு செய்யும் முறை
27.10.2014
4.
நோபெல் பரிசு வேதியியல் 2014
03.11.2014
5.
நோபெல் பரிசு மருத்துவம் 2014
10.11.2014
6.
நீரின்றி அமையாது உலகு
17.11.2014
7.
நானோ தொழில்நுட்பம்
24.11.2014
8.
உணவு பதப்படுத்தும் முறைகள்
01.12.2014
9.
பாய்ஸ்டுரைசேசன்
08.12.2014
10.
ஒற்றை வைக்கோல் புரட்ச்சி
15.12.2014
11.
வேண்டும் நமக்கு வெப்பம்
22.12.2014
12.
காப்புரிமை பெறுவது எப்படி?
29.12.2014
13.
பதிப்புரிமை பெறுவது எப்படி?
05.01.2015
14.
புவிசார் குறியீடுகள் பெறுவது எப்படி?
12.01.2015
15.
வணிகக் குறியீடுகள் பெறுவது எப்படி?
19.01.2015
16.
உணவுப் பொருட்களின் மேல் விவரக்குறிப்பிடுதல்
02.02.2015
17.
மாற்றியமைக்கப்பட்ட சூழ்நிலையில் உணவு சேமிப்பு
29.02.2015
18.
காற்று நமக்கு தேவை
16.02.2015
19.
ஆற்றல் அளப்பரியது
23.02.2015
20.
உயர் அழுத்தத்தில் உணவு பதப்படுத்துதல்
02.03.2015
21.
சிறுதொழில் தொடங்கிவது எப்படி?
09.03.2015
22.
ஏற்றுமதி தொழில் தொடங்கிவது எப்படி?
16.03.2015
23.
நல்ல கட்டுரை எப்படி எழுதுவது?
23.03.2015
24.
குளிர்சாதனபெட்டி எப்படி வேலை செய்கிறது
6.04.2015


நிகழ்ச்சிகள் பல்கலைக்கழக வலைதளத்திலும் உள்ளது  

சுட்டி: http://agritech.tnau.ac.in/community_radio/2015/community_radio.html