Tuesday, April 14, 2015

ஜெயகாந்தன் என்றொரு சகாப்தம்



நான் மிகுந்த மரியாதை கொண்ட எழுத்தாளர்களுல் ஜெயகாந்தனும் ஒருவர். சென்றவாரம் அவர் இறந்த செய்தியை கேட்டு மிகவும் வருந்தினேன். வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை சந்திக்க நேருகிறது ஆனால் ஒருசிலர் மட்டும் என்றும் மனதில் நின்றுவிடுவார்கள் அப்படிப்பட்டவர்களில் எனக்கு ஜெயகாந்தனும் ஒருவர். நான் அடிக்கடி எனக்குள் கேட்டுக் கொள்வதுண்டு நாம் எதற்காக வாழ்கிறோமென்று. வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்துலயும் ஏதோ ஒன்றை துரத்திக் கொண்டு இருப்பதைப் போன்ற இந்த வாழ்க்கையை நான் வாழ்ந்து என்ன பெரிதாக சாதித்து விடப்போகிறேனென்று. மனிதனுடைய சராசரி ஆயுள் 60-75 வருடம் என்று சொல்கிறார்கள். வெறும் சொற்ப காலமே இந்த பூமியில் வாழப்போகும் நான் எதற்காக இந்த சமூதாய சிக்கல்களில் மாட்டிக் கொண்டு அல்லல் பட வேண்டும். இந்த கேள்விகளுக்கு எனக்கு விடைகள் கிடைத்த இடம் ஜெயகாந்தன்.   

அவர் எழுதுவதை நிறுத்தி ஆண்டுகள் பல ஆகிவிட்டன. அதற்கு எனது எழுத்து இக்காலத்தவர்களுக்கு ஒத்துவாராது என்று கூறியதாக நினைவு. நான் யோசித்து பார்க்கின்றேன், இன்று ஒரு சினிமா நடிகருக்கு உடம்பு சரியில்லை என்றால் வருத்தப்படும் தமிழர்கள் பெத்த அம்மா, அப்பாவிற்கு ஏதாவது ஒன்றென்றால்கூட அவ்வளாவாக வேதனைப்படுவதில்லை. இன்று பெரும்பாலனவர்கள் குறிப்பாக என்னைப் போன்ற இளைஞர்கள் சினிமா மற்றும் கிரிகெட் ஆட்டத்தில் அதிக அக்கரை காட்டியும் தங்கள் பொன்னான நேரத்தை அதிகம் செலவலித்தும் வருகின்றோம் நமக்கு தெரியப்போவதில்லை நம்முடைய அறியாமையை பயன்படுத்தி மற்றவர்கள் எப்படி லாபமடைகின்றனர் என்று.  இந்த மோகம் மூலைச்சலவை செய்யப்பட்டு ஜீன்களிலும் பதிந்து விட்டது இப்படிப்பட்டவர்களுக்கு இவர்கள் விரும்பும்படியான கதைகளை ஜெயகாந்ததன் ஒருபோதும் படைத்துவிட முடியாது, தான் எழுதாததற்கு அவர் கூறிய விளக்கத்திற்குள்ளே எவ்வளவு நிதர்சணம் இருந்திருக்கின்றது என்பதை என்னால் இன்று உணர்ந்துகொள்ள முடிகின்றது.

ஜெயகாந்தன் அவர்கள் ஏழைகளின் வாழ்க்கையை தன் கதைகளில் விவரிக்கும் பாங்கு உண்மையில் ஏழையாய் இருப்பவர்களுக்குத்தான் புரியும். அவருடைய ”யாருக்காக அழுதான்” கதையை படிக்கும் போது என்னையறியாமல் நான் அழுதது இன்றும் நினைவிலிருக்கிறது. இன்று நமது பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கும், சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் ஏழைகள் ஒரு காட்ட்சிப் பொருளாக தெரிகின்றனர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. தனது சிறுவயது நாட்களில் அவருக்கு ஏற்ப்பட்ட அனுபவப்பதிவுகள் அவை.

பாரதியாரின் கவிதைகளுக்கு ஏற்ப தனது எழுத்தை ஒரு தவமாக பாவித்தவர் ஒரு இடத்தில் இப்படி சொல்கிறார் “கல்லடி கிடைத்தாலும் எழுதுவேன், காசு தரவிட்டால் தான் என்ன? பிழைப்புக்கு வேறு ஏதேனும் தொழில் செய்வேன். எழுத்து எனக்கு சீவனமல்ல; அது என் ஜீவன்”.   இன்று உணர்வுப்பூர்வமான செயல்களை நாம் இங்கு எதிர்பார்க்கலாகாது. எல்லாமே மெக்கானிக்கலாக மாறிவிட்டது. வாழ்க்கை உட்பட. அண்மையில் நான் படித்த வரிகள் “வாழ்க்கை என்பது ஒரு அறிய வாய்ப்பு ஆனால் அதன் மதிப்பு வாழ்வோரைப் பொறுத்தது” என்று, பிள்ளைகளுக்கு காசு பணம் அதிகம் சேர்த்து வைத்தாரா என்று  தெரியவில்லை ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டார் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது ஏனெனில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து வரும் என்னைப்போன்ற எத்தனையோ பேர் அவரை நினைவுகூறுகின்றனர் இதை விட ஒரு மனிதனுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள்  

வாழ்க்கைப் பற்றி சில வரிகள் (ஜெயகாந்தனின் சிந்தையில் ஆயிரம் கட்டுரைத் தொகுப்பிலிருந்து நான் ரசித்தது)

  • ”வாழ்க்கைக்கு எவ்வளவோ விசயங்கள் தேவைதான், ஆனால் ‘இதுவே வாழ்க்கை, வாழ்வதுவே இதற்குத்தான்’ என்னும்படியாக எனக்கு எதுவும் இல்லை”.

  • ”எனது சுயமரியாதை முக்கியம் என்பதால் மற்றவரின் சுதந்திரத்தில் நான் தலையிடுவதில்லை”.

  • ”நன்றியுடைமை என்பது முகஸ்துதி அல்ல; லஞ்சம் கொடுப்பதும் அல்ல”.

  • ”எந்த புகழுக்கும் ஏங்கித்தவிக்கிற வேட்கை எனக்கில்லை; அந்த வேட்கை இல்லாததால் எனக்கு விரக்தியும் இல்லை”.

  • ”எந்த ஒரு காரியத்தையும் கேவலம் என்று நினைத்துக் கொண்டும், கேவலம் என்று தெரிந்து கொண்டும் அதைச் செய்வது கீழ்மையாகும். நான் மேலானவனானால் நான் செய்யும் காரியங்கள் எதுவாயினும் அவை மேன்மையுறுதல் வேண்டும்”.

  • ”நாம் அழுவதானால் நமக்காகவே அழுவோம் அதைத் தவிர நாம் ஏதும் செய்வதற்கில்லை. நாம் வருத்தப்படுவதனால் நமக்காகவே வருத்தப்படுவோம், இயற்கை அதற்குத்தான் நம்மை லாயக்காக்கியிருக்கிறது”.

  • ”என்னுடைய பார்வைதான் சரியென்று சாதிக்கிற பிடிவாதம் எனக்கில்லை. இந்தப் பார்வை தவிர பிற பார்வைகளெல்லாம் தவறானது என்று சாதிக்கிற அறியாமையும் எனக்கில்லை. இது என்பார்வை”.  
 
  • ”இந்த மண்ணில் பிறந்தோமேயொழிய இந்த மண்ணின் மீது உரிமை பாராட்ட இதனை நாம் படைத்தோமில்லை”.   

    நடைமுறை வாழ்க்கையில் எவ்வளவோ எழுத்தாளர்களை நான் கவணித்து வருகிறேன். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்ற கூற்றுக்கு ஏற்ப பணம் கிடைக்குமென்றால் எதையும் அவர்கள் எழுத தயங்குவதேயில்லை. அதனால் சமூகத்திற்கு என்ன நன்மை, என்ன பாதிப்பு என்பதை ஒருபோதும் அவர்கள் கவலை கொள்வதாகவும் தெரியவில்லை ஆனால் ஜெயகாந்தன் பணத்தை ஒரு பிண்டமாகவே பாவித்தவர் எவ்வளவோ பெரிய கவுரவங்கள் கிடைத்த போதிலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் எளிமையாக வாழ்ந்த வாழ்க்கையை எல்லோரும் அறிவர். காந்தியடிகள், தந்தை பெரியார், கர்மவீரர் காமராஜர் போன்றோரின் வாழ்க்கைகளை நான் படித்துத்தான் தெரிந்து கொண்டேன். ஆனால் சமகாலத்தில் இப்படி ஒரு ஆளுமையை நேரடி பாதிப்பினால் உள்வாங்கிக் கொண்ட அனுபவம் என்வாழ்வில் பசுமையாக இருக்கும். தமிழ்ச் சமூக வரலாற்றில் இவருக்கென்று தனியிடம் என்றும் இருக்குமென்று எல்லோரையும் போல நானும் நம்புகின்றேன்.



 நன்றி: தி இந்து, தமிழ் நாளிதழ்

Wednesday, April 8, 2015

சமூதாய வானொலி: அறிவியல் அறிவோம்



      யாருமே இல்லாத கடைக்கு டீ ஆத்திகிட்டிருப்பதைப் போல நானும் அறிவியல பத்தி பேசிக்கிடிருக்கேன். ஆர்வமுள்ளவர்கள், ஆர்வமில்லாதவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருக்கும் தேவையான செய்திகளுடன் நான் வழங்கிவரும் அறிவியல் அறிவோம் வானெலி நிகழ்ச்சி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சமுதாய வானொலியில் வாரம்தோறும் திங்களன்று ஒலிபரப்பப்பட்டுவருகின்றது.

இதுவரை வந்த நிகழ்ச்சிகள்

வ.எண்
தலைப்பு
தேதி
1.
மாங்கல்யான் வெற்றிக்கதை
13.10.2014
2.
நோபெல் பரிசு இயற்பியல் 2014
20.10.2014
3.
நோபெல் பரிசு தேர்வு செய்யும் முறை
27.10.2014
4.
நோபெல் பரிசு வேதியியல் 2014
03.11.2014
5.
நோபெல் பரிசு மருத்துவம் 2014
10.11.2014
6.
நீரின்றி அமையாது உலகு
17.11.2014
7.
நானோ தொழில்நுட்பம்
24.11.2014
8.
உணவு பதப்படுத்தும் முறைகள்
01.12.2014
9.
பாய்ஸ்டுரைசேசன்
08.12.2014
10.
ஒற்றை வைக்கோல் புரட்ச்சி
15.12.2014
11.
வேண்டும் நமக்கு வெப்பம்
22.12.2014
12.
காப்புரிமை பெறுவது எப்படி?
29.12.2014
13.
பதிப்புரிமை பெறுவது எப்படி?
05.01.2015
14.
புவிசார் குறியீடுகள் பெறுவது எப்படி?
12.01.2015
15.
வணிகக் குறியீடுகள் பெறுவது எப்படி?
19.01.2015
16.
உணவுப் பொருட்களின் மேல் விவரக்குறிப்பிடுதல்
02.02.2015
17.
மாற்றியமைக்கப்பட்ட சூழ்நிலையில் உணவு சேமிப்பு
29.02.2015
18.
காற்று நமக்கு தேவை
16.02.2015
19.
ஆற்றல் அளப்பரியது
23.02.2015
20.
உயர் அழுத்தத்தில் உணவு பதப்படுத்துதல்
02.03.2015
21.
சிறுதொழில் தொடங்கிவது எப்படி?
09.03.2015
22.
ஏற்றுமதி தொழில் தொடங்கிவது எப்படி?
16.03.2015
23.
நல்ல கட்டுரை எப்படி எழுதுவது?
23.03.2015
24.
குளிர்சாதனபெட்டி எப்படி வேலை செய்கிறது
6.04.2015


நிகழ்ச்சிகள் பல்கலைக்கழக வலைதளத்திலும் உள்ளது  

சுட்டி: http://agritech.tnau.ac.in/community_radio/2015/community_radio.html

Friday, January 9, 2015

நான் ஊணமுற்றவன்…



     நமது வாழ்க்கையில் நமக்கு கெடுதல் தரக்கூடிய செயல்களையோ அல்லது உடல் அங்கங்கள் பாதிக்கக்கூடிய செயல்களையோ யாரும் விரும்பிச் செய்ய ஆசைப்பட மாட்டோம். நான் ஊணமுற்றவன். ஒன்றுமட்டும் உறுதியாக சொல்லமுடியும் தெரிஞ்சோ தெரியாமலோ உடலில் ஏதாவது குறை ஏற்பட்டுவிட்டால் அவ்வளவு எளிதாக தங்கள் அன்றாட நாட்களை நாம் வாழும் இச்சமுதாயத்தில் கழித்துவிட முடியாது என்று. உடல் ரீதியான குறைகள்கூட பெரிய விசயம் கிடையாது மனரீதியான இடர்பாடுகள் இங்கு மிக அதிகம். என்னைப் பொறுத்தவரையில் உடல் ஊணமுற்றவர்கள் வாழ்வதைவிட சாவதே மேல். இதைச் சொல்ல மிகுந்த வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் அதுதான் உண்மை. மற்ற நாடுகளில் நிலமை என்ன என்று எனக்கு தெரியாது. நான் இந்தியாவில் உள்ள பொரும்பாலான மாநிலங்களுக்கு சென்று வந்திருக்கிறேன், மற்ற மனிதர்களின் கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும், ஏளனங்களுக்கும், அனுதாபங்களுக்கும் அதிகம் ஆளகியிருக்கிறேன், இன்றும் ஆளாகிக் கொண்டிருக்கிறேன் என்ற முறையில் இதைச் சொல்கிறேன். எனக்கு மட்டும் என்று நினைக்க வேண்டாம். என்னைப் போன்ற எல்லோருக்கும் இந்த நிலைதான். மனதைரியத்தை வளர்த்துக் கொண்டவர்கள் ஒரளவிற்கு எல்லா இன்னல்களையும் தாண்டி வாழ்க்கையில் வெற்றி பெருகிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். மனவலிமையை வளர்த்துக் கொல்லக்கூடிய சூழல்கூட இங்கு இல்லாததால் கூனி குறிகி வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் ஊணமுற்றவர்களின் வரலாறுகள் மிக அதிகம்.

சமீபத்தில் நான் கேட்ட அஷ்ட வக்கிரர் கதை நான் எழுதும் இந்த பதிவிற்கு காரணம்.

“உடல் எட்டு கோணல்களாக திருகி காணப்பட்ட அஷ்ட வக்கிரர். பல்வேறு இன்னல்களை தாங்கிகொண்டு வாழ்ந்து வந்தவர். தன்னிடமுள்ள குறைகளைப் பற்றி கவலைப்படமால் வேதங்களை நன்கு பயின்று கைதேர்ந்தவராக விளங்கினார். ஒருமுறை மகாராஜா கூடியிருந்த வேதம் பயின்றவர்கள் விவாதிக்கும் இடத்திற்கு அப்படியும் இப்படியுமாக அசைத்துக் கொண்டு உள்ளே வந்தார் அஷ்ட வக்கிரர். அவர் நடந்த விதமே பலருக்கு வேடிக்கையாக இருந்தது. கூடியிருந்த சபையோர் அவரைப் பர்த்துக் கேலி செய்தனர். சிலர் அருகே வந்து அமர்ந்து அவருடைய உடம்பை தடவிப் பார்த்தபடி இப்படி இந்த உடம்போடு இங்கு எதற்கு வரவேண்டும் என்று அவமரியாதையாக பேசினார்கள்.

கம்பீரமாக மகாராஜாவை உற்றுப் பர்த்த அஷ்ட வக்கிரர் அரசே இனி நான் இந்த இடத்தில் இருக்க விரும்பவில்லை புறப்படுகிறேன் என்றார். அதற்கு மகாராஜா, ஐயா இது வேதஞானம் உள்ளவர்கள் இருக்கும் இடம் இங்கு தாங்கள் தங்களின் அறிவை வெளிபடுத்த வாய்ப்பு தருகிறேன் கொஞ்சம் பொருங்கள் என்றார்.

அஷ்ட வக்கிரர் எல்லோரையும் பார்த்தபடி கம்பீரமாகச் சொன்னார், இது வேத விற்பன்னர்கள் கூடும் சபை என்று நம்பித்தான் நானும் வந்தேன். ஆனால் இதுவோ செருப்புத் தைப்பவர்கள் சேர்ந்திருக்கும் இடமாக அல்லவா இருக்கிறது என்றார்.

எங்களை எப்படி இவர் செருப்புத் தைப்பவர்கள் என்று அவமதிக்கலாம். என்று பண்டிதர்கள் சபை அலரியது.

அமைதியாக அஷ்ட வக்கிரர் விளக்கினார், ஒரு மரம் கோணலாக இருந்தால் மரவேலை செய்பவர் கவலைப்படுவார். மரத்தை தடவிப்பார்த்து அது நேராக இருக்கிறதா என்று ஆராய்வார். அதுமாதிரி ஒரு விலங்கைப் பார்த்தும் அது கோணலாக இருக்கிறதா, வளைந்துவிட்டால் ஆஹா இதன் தோல் வேலைக்கு ஆகாதே என்று செருப்புத் தைப்பவர் அதை வெறுப்பார். இவர்கள் பண்டிதர்கள். என் அறிவின் ஆழத்தை பார்த்திருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு என் உடம்பின் கோணலை, தோலின் கோணலை அளவிட்டு என்னை கேலி செய்கிறார்கள் எனவேதான் கேட்கிறேன் இது பண்டிதர் சபையா? செருப்புத் தைப்பவர்கள் கூடியிருக்கும் இடமா? என்று அஷ்ட வக்கிரர் கேட்கிறார்”.

இதைப் படிக்கும் நம்மவர்ளுக்கு எங்கே புரியப்போகிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் வேதனையின் ஆழம். என்ன இருந்தாலும் தனக்குன்னு வந்தாத்தானே தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்ன சொல்லீறீங்க. 

ஸ்டீபன் ஹாக்கிங் என்றொரு விஞ்ஞானி. மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு இணையாக கருதப்படும் தற்கால மனிதர். இன்றும் உயிரோடு வாழ்ந்து வருகிறார். அறிவியலின் தந்தை ஐசக் நியூட்டன் வாழ்ந்த காலத்தில் வகித்த லூகாசியன் பேராசிரியர் பதவியில் இன்று இருப்பவர்.  இயற்பியலாளர். பிரபஞ்சவியலில் ஆய்வுகள் செய்து பல புதிய கோட்பாடுகளை உருவாக்கியிவர். இவரின் கருந்துளை (Block hole) பற்றிய ஆய்வுகள் மிகவும் பிரசித்தி. பாமர மக்களுக்கும் புரியும்படி அறிவியல் புத்தகங்கள் உலகளவில் இன்றும் விற்பனையில் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் அளவிற்கு எழுதியுள்ளார். முடிந்தால் The brief history of time, The theory of everything இந்த தலைப்புகளை கூகுள் பண்ணி பாருங்கள் நான் சொல்வது பொய்யில்லை என்பது புரியும். இவரின் சொற்பொளிவுகளை கேட்பதற்கு நுழைவுக் கட்டணம் மிகவும் அதிகம் ஆனாலும் நுழைவுச்சீட்டு கிடைப்பது கடிணம். ஒரு விஞ்ஞானியின் சொற்பொழிவை கேட்பதற்கா? என்று என்னலாம். இந்தியாவில் ஒருமுறை வழங்கிய சொற்பொழிவிற்கு குறைந்த கட்டணமாக ரூ. 15000/- வசூலிக்கப்பட்டது. இதெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் அவருக்கு உடம்பில் என்னவென்று சொல்லத்தெரியாத நரம்பு நோய் ஏற்பட்டு எல்லா பாகங்களும் செயலிலந்து விட்டன. கண் மட்டும் இமைக்கும் மற்றபடி மூளை வேலைசெய்கிறது அவ்வளவுதான். சர்கரநாற்காலியில் பொருத்தப்பட்டிருக்கும் கணினி அவரின் இமை அசைவுகளை செய்திகளாக மாற்றி ஒலிவடிவத்தில் கொடுக்கிறது அதன் மூலம் தான் எல்லா தகவல் பரிவர்தனைகளையும் செய்கிறார். ஒர் நேர்கானலில் இப்படி குறிப்பிடுகிறார் உடம்பில் என்ன இருக்கிறது இன்னும் சொல்லப்போனால் எனக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதால்தான் எப்பொழுதும் என்மனம் ஒயாது பிரபஞ்சத்தினை பற்றி ஆழ்ந்த சிந்தனை செய்ய முடிகிறது. இயற்கையின் ஆச்சரியங்களை உணர்ந்து கொள்ள முடிகிறது என்கிறார். ஆனால் இவர் வெளிநாட்டுகாரர். ஒரு வேலை இங்கிலாந்தில் நிலமை வேறாக இருக்குமோ என்னவோ. இவர் மட்டும் நம்மூரில் இருந்திருந்தார் அறிவியல் ஒரு பொக்கிசத்தை இழந்திருக்கும்.

என் வாழ்க்கையில் ஒரு சம்பவம் இளநிலை வேளாண் பொறியியல் பட்டப் படிப்பை முடித்துவிட்டு வேலைதேடிக்கொண்டிருந்த காலம் அது. அப்பெல்லாம் அதிக வெளிவுலக பரிட்சயம் எனக்கு கிடையாது, நம்மை சுற்றியுள்ளவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்ற பிரஞ்கை எனக்குள் ஏற்பட்டிருக்காத நேரம். பணப்பிரச்சினை மற்றும் குடும்ப எதிர்பார்புகளை சமாளிக்க ஏதாவது ஒரு வேலை பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் வேலை தேடி அலைந்தேன். ஒரு சில தோல்விகளுக்கு பிறகு ஒரு தனியார் கம்பெனியில் வேலை கிடைத்தது. விவசாயிகளை சந்தித்து எங்கள் நிறுவன கருவிகளை விற்பனை செய்வதுதான் என் வேலை. நேர்முகத்தேர்வின் போதே அதிக கேள்விகள் கேட்டுத்தான் என்னை தேர்வு செய்தனர். பணியில் சேர்ந்த பொழுது எனக்கு முன் வேலைப் பார்பவனிடம் சிறிது காலம் பயிற்சி பெற்றுக்கொள்ள அவனது மேற்பார்வையில் இருக்குமாறு சொல்லி அவனது இடத்திற்கு என்னை அனுப்பி வைத்தனர். அவன் முதன் முதலில் என்னை பார்த்தவுடனே மேனேஜருக்கு போன் செய்து இவனை ஏன் என் தலையில் கட்டுரீங்க இவனை வைத்து எப்படி வேலை வாங்குவது என்று நீண்ட விவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டான். இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு என்னை அறியாமல் கண்ணில் நீர் வரத்தொடங்கியது. அன்று இரவு முழுவதும் அழுதேன். குடுப்பச் சூழல் அந்த வேலையை செய்தே ஆக வேண்டுமன்ற கட்டாயத்தில் நானிருந்ததால் மனவலிமையை வளர்த்து கொள்ள பழகினேன். அதற்கு பிறகு பணியில் சேர்ந்த ஆறு மாதத்திற்குள் என் பணியினை பாராட்டி இன்கிரிமெண்ட் கிடைக்கும் அளவிற்கு மாறியது வேறுவிசயம். ஆனால் அதற்கு நான் பட்ட இன்னல்களை விவரிப்பது கடினம். 

உடலில் ஊணம் என்பது ஒரு குறையல்ல என்பதை மறந்து வாழத்தான் ஆசைப்படுகிறோம் நாங்கள். ஆனால் அப்படியெல்லாம் நீங்க இங்கு வாழ்ந்துவிட முடியாது என்று அடிக்கடி சமூதாயம் நினைவு படுத்திய வண்ணம் இன்றும் தொடர்ந்து கொண்டிதானிருக்கிறது. அனுபவம் அதிகம் கிடைத்துவிட்டதால் நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை ஏனென்றால் நம் மக்கள் எல்லோருக்கும் மன முதிர்ச்சி ஏற்பட்டு ஊணமுற்றவர்களை ஒரு பிண்டமாக பார்பதை தவிர்த்து சகமனித அங்கிகாரம் தரவேண்டும் என்று நினைப்பது என் தவறு என்பதை உணர்ந்துவிட்டேன். என்னயிருந்தாலும் அவர்களைப் பொறுத்தவரையில் ஊணமுற்றவர்களாகிய என்போன்றோர் வாழத்தகுதியற்றவர்கள் தானே… நான் வேதனைப்படுவதால் என்ன பெரிதாக நடந்துவிடப்போகிறது இங்கு….